திருச்சி: திருச்சி மாநகர போலீஸ் பயன்படுத்திய, கழிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஏலம் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 13 வாகனங்களின் ஏலம் இன்று நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களால் வாகன ஏலம் வரும் 13ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் என காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.