டெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதள அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவதாகவும், உண்மையை பேசும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று யெச்சூரி கூறியுள்ளார்.