உதகை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரை மிரட்டிய புகாரில் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரை மிரட்டியும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் அமுதா அளித்த புகாரில் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் உள்பட 9 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.