மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 72,102 புள்ளிகளானது. மாருதி சுசூகி பங்கு 2.9%, பவர்கிரிட், நெஸ்லே பங்குகள் தலா 2%, எஸ்பிஐ பங்கு 1.9%, ஐடிசி பங்கு 1.5% விலை உயர்ந்தன. ரிலையன்ஸ் 1%, கோட்டக் வங்கி, டெக் மகிந்திரா பங்கு 0.9%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 0.8% விலை உயர்ந்து விற்பனையாயின. டாடா ஸ்டீல் பங்கு 1.9%, டாடா மோட்டார்ஸ் 1.7%, ஆக்சிஸ் வங்கி பங்கு 1.5% விலை குறைந்து வர்த்தகமாயின. எச்.டி.எஃப்.சி. வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர், JSW ஸ்டீல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன.