மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 64,113 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் அதிகரித்து 19,141 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.