மதுரை: கிராம சுகாதார செவிலியர்களின் நேரடி நியமனத்துக்கு கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முறையாக அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த தெய்வானை என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.