டெல்லி: மே 7ம் தேதி நடக்கவிருந்த இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூட்டமைப்பின் தலைவர் மீது புகார் எழுந்துள்ளது. டெல்லியில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் தேர்தலை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.