சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் ஞாயிறன்று 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடம்பாக்கம் தாம்பரம் இடையே நாளை மறுநாள் காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.