மதுரை: மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்; ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கை திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனைக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியதில் சோனை உயிரிழந்தார். கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.