கோவை: கோவை பில்லூர் அணையில் இருந்து 3,000 கன அடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம் 94.50 அடியாக உள்ள நிலையில் 90 நாட்களுக்குப் பின் 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.