திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் திருமூர்த்திமலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக தோணியாற்றின் கரையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக் கப்படவில்லை. தோணியாற்றில் ஏற்பட்ட வெள்ளநீர் , சுற்றுப்பிரகாரம், கன்னிமார் கோவில், மூலவர் சன்னதி என ஆர்பரித்து ஓடியதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.