சென்னை: ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்தான் கலைஞர்; கலைஞர் வழியில் செயல்பட்டு வருபவர் முதலமைச்சர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மீது கறை பூசுவதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது, அது எப்போதும் நடக்காது, சமூக வலைதளங்களில் கட்சிக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் எனவும் மதத்தை அரசியலாகவும் அரசியலை மதமாகவும் பார்க்கும் பாசிஸ்டுகள் இருக்கிறார்கள் எனவும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவின் அனைத்து மாவட்ட துணை அமைப்பாளர்கள் அறிமுக கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார். மேலும் அமலாக்கத்துறை, வருமான வரி என பாஜக அரசின் எந்த அணிகள் வந்தாலும் பயப்படமாட்டோம் எனவும் வர கூறினார்.
ஜாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர்தான் கலைஞர்; கலைஞர் வழியில் செயல்பட்டு வருபவர் முதலமைச்சர்: அமைச்சர் உதயநிதி
previous post