புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 8 சம்மன்களை அமலாக்கத் துறை அனுப்பி உள்ளது. சம்மனை கெஜ்ரிவால் நிராகரித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறை நேற்று 2வதாக புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 174வது பிரிவின் கீழ் (அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்பணிந்து ஆஜராக மறுப்பது) தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி திவ்யா மல்கோத்ரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.