Friday, May 24, 2024
Home » உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

by Karthik Yash

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் மீன் கடைகள், உணவகங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், இப்பகுதிக்கு வருபவர்கள் வாகனங்களை சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்று விடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது நீதிபதிகள் மெரினா கடற்கரை லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலை, நடை பாதைகளால் ஆக்கிரமித்து மீன் கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொது சாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது. இந்த சாலை மீன் கழிவு கொட்டுவதற்காக உள்ளதா? லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் 18ம் தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினர். இந்நிலையில் கடைகள் அகற்றப்படுவதை அறிந்ததும் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டனர். அவர்கள் மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். உடனே கடைகளை அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறினர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். ஆனாலும் மீனவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட போது அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் இருந்தனர். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினர். ஆனாலும் ஒரு சிலர் கடைகளை அகற்றாமல் இருந்த நிலையில் பொருட்கள் மற்றும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அகற்றினர்.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi