சென்னை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 மனுக்கள் மீதும் சற்றுநேரத்தில் விசாரணை நடைபெறுகின்றது. வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்ததை நிராகரிக்கக் கோரி திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ வாதம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது என தகவல் வெளியாகியுள்ளது.