பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானம், இன்று காலை 6.15 மணியளவில் தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதாகவும் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.