சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி நடைபெறும் பணிகளை உடனே நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு. கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து வழக்கு தொடரப்பட்டது.