கொழும்பு: தமிழகத்தை தொடர்ந்து முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இலங்கை திரிகோணமலை சம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலாவதாக சம்பூர் பத்ரகாளியம்மன் கோயில் மாடு வாடிவாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்வில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.