Sunday, May 19, 2024
Home » இறுதி பட்டியல் வெளியீடு; தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள் போட்டி: ஓபிஎஸ்சுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

இறுதி பட்டியல் வெளியீடு; தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள் போட்டி: ஓபிஎஸ்சுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

by Mahaprabhu

சென்னை: தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண்கள் 874, பெண்கள் 76 பேர். மதிமுகவுக்கு ‘தீப்பெட்டி’ சின்னமும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘பானை’ சின்னமும் கிடைத்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது.

இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 27ம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1091 பேர் வேட்புமனு அளித்து இருந்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 28ம் தேதி நடந்தது. அப்போது, வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. ஒரு சில முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனால் அங்கெல்லாம் வேட்புமனு தாக்கல் பரிசீலனையில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால், பல இடங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 651 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற 29ம் தேதி மற்றும் 30ம் தேதி (நேற்று) மாலை 3 மணி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருந்தது. நேற்று முன்தினம் 29ம் தேதி அரசு விடுமுறை (பெரிய வெள்ளி) என்பதால் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று காலை முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டனர். 135 பேர் தங்கள் மனுக்களை வேட்புமனுக்கள் தாக்கலுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கெல்லாம் வேட்புமனு தாக்கல் பரிசீலனையில் காலதாமதம் ஏற்பட்டது. இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 651 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்பப்பெற 29ம் தேதி மற்றும் 30ம் தேதி (நேற்று) மாலை 3 மணி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருந்தது. நேற்று முன்தினம் 29ம் தேதி அரசு விடுமுறை (பெரிய வெள்ளி) என்பதால் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று காலை முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டனர். 135 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் இறுதி பட்டியலை நேற்று இரவு 8 மணிக்கு மேல் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 152 சுயேச்சை சின்னங்களில் அவர்கள் கேட்ட சின்னம் ஒதுக்கப்படும் என்றும், ஒரு சின்னத்தை 2 சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. மதிமுகவுக்கு அவர்கள் கேட்ட பம்பரம் சின்னம் தரப்படவில்லை. அதற்கு பதிலாக மதிமுகவுக்கு ‘தீப்பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘பானை’ சின்னம் கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுத்து விட்டது. நீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையம் விசிகவுக்கு பானை சின்னம் வழங்க மறுத்து விட்டது. ஆனால், விசிக போட்டியிடும் விழுப்புரம் தொகுதியைப் பொறுத்தவரை சுயேச்சைகள் யாரும் பானை சின்னத்தை கேட்காததால் அங்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேசமயம் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்தில் சுயேச்சைகள் கேட்டனர். ஆனால் கட்சியின் அடிப்படையில் அவர் கேட்டபடியே ‘பானை’ சின்னம் கிடைத்தது. அதேபோன்று, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாளி சின்னம் கேட்டார். அதே சின்னத்தை அங்கு சுயேச்சையாக போட்டியிடும் மற்ற பன்னீர்செல்வங்களும் கேட்டதால், குலுக்கல் அடிப்படையில் மற்றொருவருக்கு ஒதுக்கப்பட்டது. கடைசியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சுயேச்சை சின்னமான ‘பலாப்பழம்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

fourteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi