ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், தனசேகர், வக்கில்கள் முனுசாமி, சீனிவாசன், இளைஞரணி அமைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி, 130 கிளைகளில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்குவது. பெரியபாளையத்தில் ஜூன் 3ம் தேதி 1000 பேருக்கு அன்னதானம் வழங்குவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சம்பத், மொய்தீன், குணசேகரன், சுரேஷ், தண்டலம் ரவி, டில்லி சங்கர், அப்புன், சுமன், சண்முகம், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi