தேனி: தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் கணவர் டி.டி.தினகரனுக்காக வாக்கு சேகரித்த அவரது மனைவி அனுராதா வாக்களிக்கும் போது குக்கர் சின்னத்தை மறந்துவிடாதீர்கள் என கேட்டுக்கொண்டார். மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் புதிய திருப்பமாக பல வேட்பாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அந்த வரிசையில், தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் கணவர் டி.டி.தினகரனுக்காக வாக்கு சேகரித்த அவரது மனைவி அனுராதா வாக்களிக்கும் போது குக்கர் சின்னத்தை மறந்துவிடாதீர்கள் என கேட்டுக்கொண்டார். சின்னத்தை மறக்காமல் இருக்க குக்கர் போன்றே குண்டாக உள்ளது எனது கணவர் தினகரன் முகத்தை நினைவில் வைத்து கொள்ளுமாறும் அவர் நகைச்சுவையாக கூறினார்.