திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருப்பையா வீட்டில் 80 சவரன் நகை, ரூ.7 லட்சம் மதிப்பு ரோலக்ஸ் வாட்ச் திருடு போனது. கருப்பையா அளித்த புகாரை அடுத்து 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில் சுரேஷ் சிக்கினார்.