சென்னை: செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற உள்ளார். அஜர்பைஜானில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா, இன்று காலை சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பகல் 12 மணி அளவில் பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற உள்ளார்.