டெல்லி: சத்தீஸ்கர் முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் அரசியல் ஆலோசகர் வீடுகளில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். புபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது. காங்கிரஸை அச்சுறுத்துவதற்காக அமலாக்கப் பிரிவை பாஜக அரசு ஏவிவிட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.