சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குழந்தைக்கு இனிப்பு கொடுத்த வட மாநில இளைஞரை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். குழந்தை கடத்தல் என தாக்கப்பட்ட நபர் குடிபோதையில் வழி தவறி வந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.