சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடமை. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கடமையை செய்ய தவறிவிட்டது என்றார்.