மதுரை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் தேனி வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.25 அடி உயர்ந்துள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 67.26 அடியாக உயர்ந்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.