புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கண்ணனின் மறைவு புதுவை அரசியலில் ஈடுசெய்ய இயலாத இழப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே செல்வாக்கு கொண்டவராக திகழ்ந்தவர் கண்ணன் என முதல்வர் தெரிவித்தார்.