கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனா(எ) தீனதயாளன்(23). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி உள்ளார். இது சம்பந்தமாக இளம் பெண்ணின் பெற்றோர்கள் மேற்கண்ட வாலிபரிடம் பலமுறை திருமணம் செய்ய கோரி வலியுறுத்தினர்.
இருப்பினும், வாலிபர் திருமணம் செய்ய ஒரு ஆண்டு காலமாக மறுத்து வந்துள்ளார். எனவே, இது சம்பந்தமாக கும்மிடிப்பூண்டி அனைத்து காவல் நிலையத்தில் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த வாலிபர் மீது புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி நேற்று தீனதயாளனை கைது செய்தனர். இந்நிலையில், தற்போது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.