மதுரை: பாஜகவுக்கு ஆதரவு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். “நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதால், பாஜகவுக்கு ஆதரவு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. டி.டி.வி.தினகரன், சசிகலா எங்களுடன் இணைய வேண்டும் என விரும்புகிறேன்” என மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.