திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன்பட்டி பகுதியில் மகள் இறந்த சோகத்தில் பெற்றோர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி (17) என்ற சிறுமி தற்கொலை செய்ய, துக்கத்தில் இருந்த பெற்றோர் ரமேஷ், கிருஷ்ணவேணி அடுத்தடுத்து விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர். இவர்களின் மற்றொரு மகளான மோகனப்பிரியா (23) பள்ளப்பட்டி சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.