சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: 2023ம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணை www.tneaonline.org ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களது பெயருக்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.