அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை 3ம் கட்ட பாத யாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். இதில் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பாதயாத்திரை சேவூர் ரோடு, கச்சேரி வீதி, வடக்குதேர் வீதி, கிழக்கு தேர்வீதி, கடைவீதி, தபால் ஆபிஸ் வீதி, பி.எஸ்.சுந்தரம் வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்து. அங்கு அண்ணாமலை பேசினார். பாதயாத்திரையையொட்டி மகளிர் கொடி அணிவகுப்பு நடந்தது.