கொடைக்கானல்: பல உயிர்களை பலி வாங்கிய கொடைக்கானல் அஞ்சு வீடு அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட உள்ளது. கொடைக்கானல் அஞ்சு வீடு அருவியில் குளித்த 2 இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அஞ்சு வீடு அருவியில் அடிக்கடி உயிர்கள் பலியாவதை தடுக்க அருவிக்கு செல்லும் பாதையை மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.