சிவகங்கை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சந்திரனின் மகன் செந்தில்முருகன், அதிமுகவில் மாவட்ட கலை பிரிவு செயலாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டிலிருந்து மலம்பட்டி நோக்கி தனது காரில் சென்றபோது, தேர்தல் பறக்கும் படை குழுவினர் மடக்கி காரை சோதனையிட்டனர். அப்போது செந்தில்முருகன் வாகனத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ₹1.45 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதிமுக மாஜி எம்எல்ஏ மகனிடம் ₹1.45 லட்சம் பறிமுதல்
previous post