சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. இவர் முன்னாள் எம்.பி.ஆவார். சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணாசாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம், இ.எஸ்.ஐ., பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகை ஜெயப்பிரதா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இந்நிலையில் இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இன்று ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.