சென்னை: “வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது, தமிழ்நாட்டை தனது தாயகமாகவே மதித்தவர் வி.பி.சிங், முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து வரலாறு படைத்தவர். அவருக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்ட வார்த்தைகளே இல்லை” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.