சென்னை: சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு வி.பி.சிங் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன் அபய்சிங், அஜயசிங் பேட்டி அளித்துள்ளனர். சென்னையில் அமைக்கப்படும் வி.பி.சிங் சிலையை காண ஆர்வத்துடன் இருப்பதாக அவரது மனைவி சீதாகுமாரி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என மனைவி சீதாகுமாரி தெரிவித்துள்ளார்.