சிவகாசி, அக். 14: சிவகாசி அருகே பள்ளபட்டி ரோடு முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் கார் டிரைவர் கணேஷ்குமார் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்.பால்பாண்டியிடம் கடந்த ஆண்டு ரூ. 16 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதற்கு ஒவ்வொறு வாரமும் ரூ.2 ஆயிரம் வட்டி கட்டி வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 2 மாதமாக பால்பாண்டிக்கு வட்டி பணம் கொடுக்க முடியவில்லை.
இதனால் அடிக்கடி கணேஷ்குமார் வீட்டிற்கு சென்று பால்பாண்டி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பால்பாண்டி அவரது உறவினர் ஏ.பால்பாண்டி மற்றும் சிலர் கணேஷ்குமாரை காரில் கடத்திச் சென்று அடித்து கொலை மிரட்டல் விடுத்து 2 மணி நேரம் கழித்து தெருவில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து கணேஷ்குமாரின் மனைவி லீலாவதி (21) கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பால்பாண்டியையும் கைது செய்து மறற்வர்களை தேடி வருகின்றனர்.