தூத்துக்குடி: கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புதூர் கே.ஆர்.நகரை சேர்ந்தவர் போத்திராஜ். இவரது மனைவி ராஜாமணி(67). நேற்று முன்தினம் தம்பதியினர் கோவில்பட்டி தனியார் பாலிடெக்னிக் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு பைக் நேருக்குநேர் மோதியது. இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த ராஜாமணி படுகாயம் அடைந்தார். உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் விபத்தில் மூதாட்டி காயம்
previous post