ராம்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் சிஆர்பிஎப் வீரர்கள் இரண்டு பேர் நக்சல்களுக்கு ஆயுதங்கள் கடத்த முயன்றபோது பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அடுத்தடுத்து உத்தரப்பிரதேச காவல்துறையை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி விஜய் குமார், 24 பேரும் குற்றவாளிகள் என்று வியாழன்று அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகள் 24 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். தண்டனை பெற்றவர்களில் 3 பேர் பொதுமக்கள். மற்றவர்கள் உத்தரப்பிரதேச காவல்துறை, ஆயுத படை, சிஆர்பிஎப் பிரிவை சேர்ந்தவர்கள். தீர்ப்பை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நக்சல்களுக்கு ஆயுதம் கடத்திய வழக்கு 21 காவலர்கள் உட்பட 24 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
previous post