மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும், பிளை துபாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளையும், பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஒரு பயணி சுற்றுலா விசாவில் துபாய் செல்ல வந்திருந்தார்.அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவருடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவருடைய ட்ராலி பேக் ரகசிய அறையில் கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சி, வெளிநாட்டு பணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் இந்திய மதிப்பு ரூ.24.37 லட்சம். அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இதை ஒருவர் துபாயில் உள்ள மற்றோருவரிடம் கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பியதாகவும், கூலிக்காக கடத்த முயன்றதாகவும் கூறினார். சுங்க அதிகாரிகள் பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்….