காரிமங்கலம், மார்ச் 31: காரிமங்கலம் அருகே, கெரகோடஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (43). இவர் காரிமங்கலத்தில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஞானசேகரன் நாள்தோறும், நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று காலை கிருஷ்ணகிரி பைபாஸ் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கும்பாரஹள்ளி செக்போஸ்ட் அருகே சென்ற போது, அவ்வழியே வந்த மினி லாரி, ஞானசேகரன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதியதில் வியாபாரி பலி
previous post