தர்மபுரி, மார்ச் 31: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் நந்தினி (17), தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்த நந்தினி, திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் ராஜேஸ்வரி பாப்பாரப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி மாயம்
previous post