தாராபுரம், மார்ச் 31: நேற்று அதிமுக வேட்பாளரின் அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன், கேவி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள அரிமா அரங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக, அரங்கத்திற்கு அதிமுக வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் வருகை தந்தார். அப்போது தொண்டர்கள் அவரை வரவேற்கும் விதமாக பட்டாசுகளை கொளுத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக பந்தல் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் அருகில் இருந்த தண்ணீர் கேன் பாட்டில்களை எடுத்துச் சென்று பந்தலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து
previous post