சேலம், மார்ச் 21: சேலம் கன்னங்குறிச்சி கேசவன் நகரை சேர்ந்தவர் நம்மாழ்வார்(75). இவரை ராஜகோபால் என்பவர் தத்து எடுத்து வளர்த்து வந்தார். ராஜகோபாலின் சகோதரி மகள் மல்லிகேஸ்வரி. ராஜகோபாலுக்கும் மல்லிகேஸ்வரிக்கும் ஏற்காட்டில் நிலம் உள்ளது. இதுதொடர்பாக நம்மாழ்வாருடன் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக மல்லிகேஸ்வரி, சேலம் லைன்மேட்டை சேர்ந்த புரோக்கரான யுவராஜ்(45) என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். அந்த நிலத்தில் நம்மாழ்வாருக்கும் பங்கு இருப்பதால், நிலம் விற்பது தொடர்பாக யுவராஜ், நம்மாழ்வாரிடம் பேசியுள்ளார். அப்போது விற்பனை செய்ய அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் நம்மாழ்வாரை யுவராஜ் போனில் மிரட்டியதாக தெரிகிறது. இதபற்றி நம்மாழ்வார் கன்னங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரை மிரட்டிய புரோக்கர் மீது வழக்கு
previous post