கோவை, ஆக.14: கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (35). கோவை மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கெம்பட்டி காலனியில் கோயில் விழா நடந்தது. அப்போது மைக்கில் திருவிழா தொடர்பாக அறிவிப்பு வெளியிட மகேந்திரன் முயற்சி செய்தார். மைக்கை எடுத்த அவர் அதில் பேசினார். ஆனால் மைக்கில் சத்தம் கேட்கவில்லை. ஒலி பெருக்கியை இணைக்க அவர் ஒயரை எடுத்தார்.
மைக் பகுதியில் அவர் ஒயர் இணைப்பதற்கு பதிலாக தவறுதலாக அவர் மின்சாரம் பாயும் ‘பிளக் பாயிண்ட்’ பகுதியில் ஒயரை செலுத்தியுள்ளார். கையில் மைக்கின் ஒரு பகுதி பிடித்திருந்தார். இதில் மின்சாரம் பாய்ந்த நிலையில் அதே இடத்தில் மகேந்திரன் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் கோயில் விழாவிற்கு வந்த பக்தர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சைக்கிள்கள் பாகங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்க பல பள்ளிகளில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த கல்வியாண்டில் படித்த மாணவர்கள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, விடுப்பட்ட மாணவர்களுக்கு முதலில் சைக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது பள்ளிகளின் மூலம் சைக்கிகள் வழங்கப்பட்டு வருகின்றன.