மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மூவாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (எ) சுரேஷ் (32). நெல் வியாபாரி. இவர் 17 வயதுடைய மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமானார். இது பற்றி அறிந்த மாணவியின் தாய் தன் மகளை கண்டித்தார். இதனால் விரக்தி அடைந்த மாணவி நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.அவர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பாபு மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் பாபு தூத்துக்குடிக்கு சென்று அங்குள்ள லாட்ஜில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்….