Thursday, May 9, 2024
Home » நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மர்ம சாவு: காதலன் விஷம் கொடுத்ததாக தாய் புகார்

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மர்ம சாவு: காதலன் விஷம் கொடுத்ததாக தாய் புகார்

by kannappan

நித்திரவிளை: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை புளியறத்தலையை சேர்ந்தவர் சின்னப்பர். பால் வியாபாரி. இவரது மகள் அபிதா (19). களியக்காவிளை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 1ம்தேதி, மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  நேற்று முன்தினம் இரவு  அபிதா உயிரிழந்தார். மாணவியின் உறவினர்கள் அபிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. எனவே காவல்துறையினர் முறையாக விசாரிக்க வேண்டும் என்றனர். இதற்கிடையே மாணவியின் தாயார் தங்கபாய் (51) மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக நித்திரவிளை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நித்திரவிளை பாணாந்தோப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், இரண்டு ஆண்டுகளாக எனது மகளை காதலித்து வந்தார். திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் உறவு செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் எனது மகள் மனம் உடைந்தார். வீட்டுக்குள் தனியறையில் முடங்கி கிடந்தார். செப்டம்பர் 7ம் தேதி, அந்த வாலிபர் தனிமையாக சந்திக்க வேண்டும் என்று அழைத்துள்ளார். இதை நம்பி எனது மகளும் சென்றார். அப்போது எனது மகளுக்கு, அந்த வாலிபர் ஏதோ விஷம் கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின் ஓரிரு நாட்களில் எனது மகள் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். கடந்த மாதம் 28ம் தேதி காலை, அந்த வாலிபரின் அம்மா எனது வீட்டுக்கு வந்து எனது மகன், உன் மகளை திருமணம் செய்ய மாட்டான் என கூறி என்னையும், என் மகளையும் திட்டிவிட்டு சென்றார். நான் எனது மகளுக்கு ஆறுதல் கூறி, உடல் நிலை சரியானதும், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என கூறி இருந்தேன். இந்நிலையில் எனது  மகள்  இறந்து விட்டார். எனது மகளின் இறப்பில் அவரது காதலன் மீது சந்தேகம் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். இதன் அடிப்படையில் நித்திரவிளை போலீசார் தற்போது  174 சி.ஆர்.பி.சி. (இயற்கைக்கு மாறான மரணம்) என வழக்கு பதிவு செய்துள்ளனர்….

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi