பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் 9வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் வேலழகி (62). இவர் மீது புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மதுபானம், மாவா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ம்தேதி வேலழகி புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து, ‘இனி எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன்’ என பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்.அதன்பிறகு, கடந்த அக்டோபர் 23ம்தேதி பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் மாவா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் வேலழகி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரணை செய்த புளியந்தோப்பு துணை கமிஷனர் பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு, தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் வேலழகியை 142 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்….
நன்னடத்தை விதிமீறி மதுபானம் விற்பனை செய்த மூதாட்டிக்கு 142 நாள் சிறை
previous post